அழகாய் போனதடி இவ்வுலகம் உன்னுடனே
புதிதாய் தோனுதடி என்னுணர்வும்
அதிகாலை கதிரவனுக்கும் அரைச்சந்திர நிலவுக்குமுள்ள இடைவெளிகள் நீளுதடி
முத்துச்சிதறும் புல்வெளியும்
முளைத்தேவிடாத விதைகளும்
இயற்க்கையாக விளங்குதடி
சிறு குழந்தையின் சிரிப்பிலே
மனநோயிலிருந்து மரணித்தேனடி
சிறிதே காலம் என் கருவறையில்
சிற்பமாக இருந்துவிட்டாயடி
அழகாய் போனதடி இவ்வுலகம்
Comments
Post a Comment