கங்கையிலே கண் கலங்கினேன் நடுநிசி சூரியனே கொல்லென்று உமிழ்ந்து தள்ளுகிறாய் ஒரு படிக்கட்டு சாட்சி பறவைகளோ வெந்நீர் குளியளில் தள்ளாடியே பல கூட்டம் விரக்தியில் சில கூட்டம் விளிம்பில் சில கூட்டம் கண் திரித்தேன் கா கா வென ஒரு கூட்டம் பின்னே தெரியாத மொழியில் துதி பாடும் ஒரு கூட்டம் கடவுளென சிறப்பு கட்டண வழிபாட்டில் சில கூட்டம் கர்வத்தில் கண் மறைந்த சில கூட்டம் அரிதாக இதற்கிடையே கொல்லென சிரிக்கும் பிஞ்சுக் கூட்டம் கடவுள் இருக்க வாய்ப்பிருக்கு கர்ப்ப கிரகத்தில் அல்ல கண்டு கொள்