மாலை வேளை ஒரு முன்னறிவிப்பில்லா மலை முகடுகளின் சாட்சியோடு கதிரவனின் கடைசி நிமிடங்கள் இன்று மட்டுமே தூர கிளைகளின் அசைவுகளின் இடையிடையே சீதையின் காதலன் கோலம் போட மறந்து விட்டான் போலும் வானம் கொஞ்சம் நீலத்தை களவு கொடுத்துவிட்டு மஞ்சளை கடன் வாங்கியிருந்தான் இன்னும் சில நிமிடங்களில் மஞ்சளும் கருப்பும் கை மாறும் வீடு நோக்கி முக்கோண வடிவத்தில் பறவைகள் எல்லாரையும் உறங்க சொல்லும் நான் கேட்பது நாளைக்கு உணவில்லை என்றென்ன அதற்கு கவலை இல்லை விடியலில் இறை தேட சிறகு விரிக்கும் மனதை தாரும் அனைவருக்கும் தினம் விரிப்போம் சிறகை