விலக்கினால் விலகலாம் வலியெல்லாம் தாங்குமா உன் இதயம்தான் அதன் சுவர்களே வெளிப்பூச்சம்மா கனவுகள் களையலாம் கவிதைகள் நெருடுதே உயிர்வரை குழம்பினேன் தவறென்ன தவறினேன் தலையணை வெறுமையே தலைக்கணம் ஒதுக்கினேன் நீலமாய் கடலொன்றை நெஞ்சுக்குள்ளே காண்கிறேன் உயிர்வரை உவர்க்குதே உறக்கத்தில் உளறினேன் உன் தனிமையை கேட்டுத்தான் என் இளமையும் தவிக்குதே நடப்பதை ரசிகனாய் எனக்குள்ளே நடிக்கிறேன் நடனங்கள் இடைவெளி கடக்கையில் வியக்கிறேன்