Skip to main content

நீலமாய் கடலொன்றை

விலக்கினால் விலகலாம்
வலியெல்லாம் தாங்குமா

உன் இதயம்தான் அதன்
சுவர்களே வெளிப்பூச்சம்மா

கனவுகள் களையலாம்
கவிதைகள் நெருடுதே

உயிர்வரை குழம்பினேன்
தவறென்ன தவறினேன்

தலையணை வெறுமையே
தலைக்கணம் ஒதுக்கினேன்

நீலமாய் கடலொன்றை
நெஞ்சுக்குள்ளே காண்கிறேன்

உயிர்வரை உவர்க்குதே
உறக்கத்தில் உளறினேன்

உன் தனிமையை கேட்டுத்தான்
என் இளமையும் தவிக்குதே

நடப்பதை ரசிகனாய்
எனக்குள்ளே நடிக்கிறேன்

நடனங்கள் இடைவெளி
கடக்கையில் வியக்கிறேன்

Comments

Popular posts from this blog

நானாகி போனேன்

நிழல் பிம்பங்களின் கனவுகளில் காலை வேளைகளை நிழல் கனவுகளின் பிம்பங்களில் மாலை வேளைகளை நெஞ்சோடு பிசகாமல் வைத்திருப்பேன் புகையாமல் நெருப்பாக உருகாதே பொன்மானே

மென்பொருள்

இனியும் இதையும் கொஞ்சம் களைந்தே நடந்தேன் நிழலும் நினைவும் ஒன்றாய் விலக அடுத்தடுத்து ஆழம் கொள்ள மை எல்லாம் மனம் போல வண்ணங்களால் கோலமிட்டேன் புள்ளிகளுக்குள் புதைந்து போன வரிகளை கொஞ்சம் வாசித்து பாரேன் வழிகளில் முள்ளும் வரிகளில் சொல்லும் கொஞ்சம் ஒத்தே போகும் நிலை கண்டேன் உன் நிழல் கண்டேன் கலை எல்லாம் கடன் வாங்கி வந்திருந்தாய் சொல் எங்கே சுகம் எங்கே மனம் எங்கே மயக்கம் எங்கே

சில நேரங்களில் பெரும்பாலும்

மழையும் இசையும் மனதை நனைத்து விட்டு செல்லும் வெள்ளபெருக்கு சில நேரங்களில் வெளியில் தெரிந்து விடும் வடிந்த நீர் சில நேரங்களில் வயல்களில் பாயும் கன்னத்தில் விளைச்சல் சில நேரங்களில் அதிகமாக இருக்கும் அறுவடை காலம் பெரும்பாலும் காலனுடைய சாட்சியம் இல்லாமல் இருக்கும்