Skip to main content

Posts

Showing posts from August, 2016

காட்டு தீ

நிஜமாக ஒரு கனாவுக்குள் நிழலாக தெரிந்த ரூபம் காட்டு பாதையில் பாட்டு பாடிக்கொண்டு ஒரு பயணத்தில் எதார்த்தமாக என்னிடம் வந்து பாதை கேட்டுவிட்டு கடந்து சென்றது என்னை விட்டு என் வழி மறந்தேன் என்னுயிரே இன்று வரை காட்டு தீயின் வெக்கையின் காந்தலில்

அனுமானம்

தென்றல் வீசும் ஜன்னல் ஓரம் கிளையோடு மரமாடும் பாதை வேறு பயணம் வேறு அவள் வந்து போன திசையும் வேறு புழுக்கம் இங்கு தெரியுதடி வசந்தம் போன இடம் தெரியலையே

காகிதப்பூ

சேர்ந்தே பூத்த முல்லை மொட்டொன்று செடியை விட்டு பிரியும் போது வலிக்க வேண்டும் என்றா எண்ண பூவுக்கோர் அர்த்தம் உண்டு மாலையில் சேர யோகம் வேண்டும்