Skip to main content

Posts

Showing posts from September, 2017

மிக சிறப்பு

அத்துணையும்  ஒரு சிறப்பான மேடை பேச்சுக்கு மெருகேற்றும் நண்பா உனது தோல்விகள்தான் உனக்கு சிறந்த பாடம் கவணில் கடைந்து விடாதே நிஜத்தில் நிலைத்து விடாதே காகிதமும் கோபுரமும் படை மாற்றி  அணி மாற்றி அலைக்கழிக்கும் மிரண்டு விடாதே மானல்ல நீ மருவி விடாதே பருவமல்ல நீ

சிந்தனை துளி

பதில் கிடைக்காத கேள்விகளுக்குண்டான பதில் ஒரு நீண்ட பயணத்தில் கிடைத்து விடும். உங்கள் சுயசரிதை யாரோ ஒருவருக்கு சரித்திர பதிவு நிச்சயமாக, அதன் ஒவ்வொரு பக்கமும் அவருக்கு அனுபவமாக இருக்க வேண்டும் மேகத்துக்கும் வானத்துக்கும் வண்ணங்களை வரைந்தவன் ஒரு சிறந்த ஓவியன் குருதிக்கும் வறுமைக்கும் வண்ணங்களை வரைந்தவன் ஒரு வாடகை கூட்டாளி ஞாயிரென்று பெயர் வைத்து அன்று விடுமுறையாம், ஆதவன் என்றாவது விடுமுறை எடுத்ததுண்டா நிலவுக்கு பாட்டி சென்றாலோ இல்லையோ தாத்தா மட்டும் கண்டிப்பா போகலை நடத்துனர் , யாசகம் கேட்பவன் , கடவுள் - என்னிடம் சில்லறை இல்லை என்பதை ஞாபக படுத்துபவர்கள்

சில நேரங்களில் பெரும்பாலும்

மழையும் இசையும் மனதை நனைத்து விட்டு செல்லும் வெள்ளபெருக்கு சில நேரங்களில் வெளியில் தெரிந்து விடும் வடிந்த நீர் சில நேரங்களில் வயல்களில் பாயும் கன்னத்தில் விளைச்சல் சில நேரங்களில் அதிகமாக இருக்கும் அறுவடை காலம் பெரும்பாலும் காலனுடைய சாட்சியம் இல்லாமல் இருக்கும்

கொடுங்கோல்

என்னுடைய ஒரே ஆறுதல் மாறாத வடுக்களை அவனுக்கு பரிசாக அளித்ததில் எனக்கு பெரும்பங்குண்டு நினைவுக்கு வருவதெல்லாம் இன்றளவும் இடறுதடி உனைப் போல் எனக்கின்னொரு பேரிழப்பேதய்யா கேளிக்கை கூத்தெல்லாம் இன்று நினைவுகளில் மட்டுமே உளவுதடி அனுமதியில் எனை முந்திக்கொண்டாய் பிறப்பிலும் இறப்பிலும் என்னருமை சகோதரா|