Skip to main content

சிந்தனை துளி

பதில் கிடைக்காத கேள்விகளுக்குண்டான பதில் ஒரு நீண்ட
பயணத்தில் கிடைத்து விடும்.


உங்கள் சுயசரிதை யாரோ
ஒருவருக்கு சரித்திர பதிவு நிச்சயமாக,
அதன் ஒவ்வொரு பக்கமும்
அவருக்கு அனுபவமாக இருக்க வேண்டும்


மேகத்துக்கும் வானத்துக்கும்
வண்ணங்களை வரைந்தவன் ஒரு சிறந்த ஓவியன்
குருதிக்கும் வறுமைக்கும் வண்ணங்களை
வரைந்தவன் ஒரு வாடகை கூட்டாளி


ஞாயிரென்று பெயர் வைத்து
அன்று விடுமுறையாம், ஆதவன் என்றாவது விடுமுறை எடுத்ததுண்டா


நிலவுக்கு பாட்டி சென்றாலோ
இல்லையோ தாத்தா மட்டும் கண்டிப்பா போகலை


நடத்துனர் , யாசகம் கேட்பவன் , கடவுள் - என்னிடம் சில்லறை
இல்லை என்பதை ஞாபக படுத்துபவர்கள்



Comments

Popular posts from this blog

நானாகி போனேன்

நிழல் பிம்பங்களின் கனவுகளில் காலை வேளைகளை நிழல் கனவுகளின் பிம்பங்களில் மாலை வேளைகளை நெஞ்சோடு பிசகாமல் வைத்திருப்பேன் புகையாமல் நெருப்பாக உருகாதே பொன்மானே

மென்பொருள்

இனியும் இதையும் கொஞ்சம் களைந்தே நடந்தேன் நிழலும் நினைவும் ஒன்றாய் விலக அடுத்தடுத்து ஆழம் கொள்ள மை எல்லாம் மனம் போல வண்ணங்களால் கோலமிட்டேன் புள்ளிகளுக்குள் புதைந்து போன வரிகளை கொஞ்சம் வாசித்து பாரேன் வழிகளில் முள்ளும் வரிகளில் சொல்லும் கொஞ்சம் ஒத்தே போகும் நிலை கண்டேன் உன் நிழல் கண்டேன் கலை எல்லாம் கடன் வாங்கி வந்திருந்தாய் சொல் எங்கே சுகம் எங்கே மனம் எங்கே மயக்கம் எங்கே

இயல்பை தேடி

நீதியெ ன்பதையா னறியேன் என் அற்புதமே நீவீ ரறிகிலேன் கொன்று மதின்று மழித்தார் அதுகொ டிதென்று உரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ நேர்மையும் வருமையும் சேர்ந்தே வளருவதனு ரமென்னவெ ன்று உரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ சாதியின் பெயரோ மதத்தின் பெயரோ மக்கி கிடக்கு மனதை கரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ முற்பி றவியும் பின்வரு வதுமென தண்டனைகளை நியாயப் படுத்துவதும் நியமிக்க மறந்தாயோ - அஃதில்லையோ அற்புதமே அனைத் தொதுங்குமா ற்றின் கரைகளை போலே இடித்துரைத்தா லென்ன பிறப்பேனி றப்பேனி டையிலே வந்துவ ந்தேபோ குமிந்த கலக்கமே நுன்றரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ உள்ளே தேடல் தொடரும்