நீதியெ ன்பதையா னறியேன் என்
அற்புதமே நீவீ ரறிகிலேன்
கொன்று மதின்று மழித்தார்
அதுகொ டிதென்று உரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ
நேர்மையும் வருமையும் சேர்ந்தே வளருவதனு
ரமென்னவெ ன்று உரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ
சாதியின் பெயரோ மதத்தின் பெயரோ மக்கி
கிடக்கு மனதை கரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ
முற்பி றவியும் பின்வரு வதுமென தண்டனைகளை
நியாயப் படுத்துவதும் நியமிக்க மறந்தாயோ - அஃதில்லையோ
அற்புதமே அனைத் தொதுங்குமா ற்றின் கரைகளை
போலே இடித்துரைத்தா லென்ன
பிறப்பேனி றப்பேனி டையிலே வந்துவ ந்தேபோ
குமிந்த கலக்கமே நுன்றரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ
உள்ளே தேடல் தொடரும்
அற்புதமே நீவீ ரறிகிலேன்
கொன்று மதின்று மழித்தார்
அதுகொ டிதென்று உரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ
நேர்மையும் வருமையும் சேர்ந்தே வளருவதனு
ரமென்னவெ ன்று உரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ
சாதியின் பெயரோ மதத்தின் பெயரோ மக்கி
கிடக்கு மனதை கரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ
முற்பி றவியும் பின்வரு வதுமென தண்டனைகளை
நியாயப் படுத்துவதும் நியமிக்க மறந்தாயோ - அஃதில்லையோ
அற்புதமே அனைத் தொதுங்குமா ற்றின் கரைகளை
போலே இடித்துரைத்தா லென்ன
பிறப்பேனி றப்பேனி டையிலே வந்துவ ந்தேபோ
குமிந்த கலக்கமே நுன்றரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ
உள்ளே தேடல் தொடரும்
Comments
Post a Comment