இதோ என்னுடைய சுய தம்பட்டம்
தேனென்று சொன்னாலே இனிக்குமென்பேன்
எதுகையு மோனையு மருளிய தென்பேன்
சொலவடையு மிலக்கியமு மியன்ற தென்பேன்
பொதுமறையு மிந்த பிரபந்தமு மிண்டிய தென்பேன்
அறமென்பேன் வீரமென்பேன்
அனைத்துயிரு மோதும என்பேன்
கடந்து உள் செல் என்பேன் கடவுளெ
ன்பேன்
உயிரெ ன்பேன் மெய்யென்பேன் உயிர்மெய்யெ ன்பேன்
பாரதிக்கு தெரிந்த தென்பேன் அவ்வைக்கு அறிந்ததெ ன்பேன்
வள்ளுவன் வடித்ததெ ன்பேன்
விளக்கென்பேன் எண்ணையென்பேன்
விளக்கெண்ணையென்பேன்
மலரென்பேன் மலரும லரும்
மாலையென்பேன்
நான் சுவைத்தது இவ்வளவே யென்பேன்
Comments
Post a Comment