எனது ராஜாங்கம்
சரிந்ததடி
உன் கட்டளைகள் பிறக்கும்போது
எனது உலகம்
உனது பார்வையில் புதியதாக
விரியுதடி
வாரி அணைக்க
வழியெங்கும் கோளமிட்டேன்
அணைக்கையிலே உள்ளம் உருகினேன்
அத்தனை ஓவியங்களும்
உன் ஒரு முக பாவனையில் உயிர்பெற்றாயிற்று
சில காலம் நீ என் தோளில்
பல காலம் நான் சென்று விட்டேன் பின்னே
Comments
Post a Comment