Skip to main content

Posts

Showing posts from August, 2017

கண்ணீரின் வேள்வி

கலயம் கொதித்திருந்தால் நெருப்பு அணைந்திருக்கும்... கொஞ்சம் கருணை இருந்திருந்தால் காலன் ஒதுங்கியிருக்கும் நிலவில் நின்றென்ன பயன் நீளக்கடல் அளந்தென்ன பயன் யாகம் வளர்த்தென்ன பயன் மாளிகையில் மந்தாரமென்ன பயன் பூனைக்கு சுட்டதினால் மாந்தர்க்கு ஒவ்வாதோ கற்களை கரைத்தென்ன பயன் வீணாக்கி களைந்தென்ன பயன் மனிதம் காத்து மறவாய் தமிழா ...

சுய தம்பட்டம்

இதோ என்னுடைய சுய தம்பட்டம் தேனென்று சொன்னாலே இனிக்குமென்பேன் எதுகையு மோனையு மருளிய தென்பேன் சொலவடையு மிலக்கியமு மியன்ற தென்பேன் பொதுமறையு மிந்த பிரபந்தமு மிண்டிய தென்பேன் அறமென்பேன் வீரமென்பேன் அனைத்துயிரு மோதும என்பேன் கடந்து உள் செல் என்பேன் கடவுளெ ன்பேன் உயிரெ ன்பேன் மெய்யென்பேன் உயிர்மெய்யெ ன்பேன் பாரதிக்கு தெரிந்த தென்பேன் அவ்வைக்கு அறிந்ததெ ன்பேன் வள்ளுவன் வடித்ததெ ன்பேன் விளக்கென்பேன் எண்ணையென்பேன் விளக்கெண்ணையென்பேன் மலரென்பேன் மலரும லரும் மாலையென்பேன் நான் சுவைத்தது இவ்வளவே யென்பேன்

இயல்பை தேடி

நீதியெ ன்பதையா னறியேன் என் அற்புதமே நீவீ ரறிகிலேன் கொன்று மதின்று மழித்தார் அதுகொ டிதென்று உரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ நேர்மையும் வருமையும் சேர்ந்தே வளருவதனு ரமென்னவெ ன்று உரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ சாதியின் பெயரோ மதத்தின் பெயரோ மக்கி கிடக்கு மனதை கரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ முற்பி றவியும் பின்வரு வதுமென தண்டனைகளை நியாயப் படுத்துவதும் நியமிக்க மறந்தாயோ - அஃதில்லையோ அற்புதமே அனைத் தொதுங்குமா ற்றின் கரைகளை போலே இடித்துரைத்தா லென்ன பிறப்பேனி றப்பேனி டையிலே வந்துவ ந்தேபோ குமிந்த கலக்கமே நுன்றரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ உள்ளே தேடல் தொடரும்

கனவு கண்டேன் தோழி

கனவு கண்டேன் தோழி பூ வனங்கள் மனம் வீச கண்டேன் மயிலாடும் மலைகள் கண்டேன் மயிர் கூச்செறியும் மரங்கள் கண்டேன் கொத்து கொத்தாய் கனிகள் கண்டேன் மண் வாசம் வீசும் வயல் வெளிகள் கண்டேன் வற்றாத கேணி கண்டேன் போர் அடிக்கும் சீருடை கண்டேன் பண்டிகையில் பாசம் கண்டேன் கண்ணீர் வடிக்கும் மேகம் கண்டேன் இறுதியில் விவசாயியின் சிரிப்பை கண்டேன் விடிந்தே போனது தோழி கண்டதெல்லாம் கனவில்லை கடந்தே போய்விட்ட பாதையடி நான் கலங்க கலங்குகிறாயோ தோழி இந்த வடு இருந்திருந்தால் அவன் கலங்க இந்த வானம் கலங்கியிருக்குமே அதெப்படி குறை அனைத்தும் இங்கிருங்க உனை வசைந்து என்ன பயன் சில நாட்கள் உணர்வோடு

டிக் டிக்

உண்மைகள் முளைக்கும்போது இனிக்கும் என்பது தெரிவதற்குள் பொய்கள் விதைக்க படுகின்றன கனவுகள் விடியும்போது நிகழும் என்பது தெரிவதற்குள் கலைக்க படுகின்றன

ராஜாங்கம்

எனது ராஜாங்கம் சரிந்ததடி உன் கட்டளைகள் பிறக்கும்போது எனது உலகம் உனது பார்வையில் புதியதாக விரியுதடி வாரி அணைக்க வழியெங்கும் கோளமிட்டேன் அணைக்கையிலே உள்ளம் உருகினேன் அத்தனை ஓவியங்களும் உன் ஒரு முக பாவனையில் உயிர்பெற்றாயிற்று சில காலம் நீ என் தோளில் பல காலம் நான் சென்று விட்டேன் பின்னே

சாரல் மழை

உண்மைகளை தேடுவதற்குள் ஏதோ ஒரு பரபரப்பான சூழலில் கட்டுண்டு வந்த காரணமோ போகும் காரணமோ தெரிவதற்குள் வழி மாறி மாறி பயணத்தில் கட்டணமின்றி ரத்தமும் இருக்கும் சதையும் இருக்கும் மமதையில் மதி மயங்கி கழித்து விடுவோம் நீயும் நானும் இடையில் வந்த சாரல் மழை

நானாகி போனேன்

நிழல் பிம்பங்களின் கனவுகளில் காலை வேளைகளை நிழல் கனவுகளின் பிம்பங்களில் மாலை வேளைகளை நெஞ்சோடு பிசகாமல் வைத்திருப்பேன் புகையாமல் நெருப்பாக உருகாதே பொன்மானே

கண்மணித் துளியே

கண்மணியே கதை கேளாய் கண்மணியே துயில் கொள்ளேன் கண்மணியே சிணுங்காதே கண்மணியே களித்து மகிழ் கண்மணியே என் ஆவியடி கண்மணியே பயக்காதே கண்மணியே உனக்கு சிரிப்பு வரும் கண்மணியே அதில்தான் என் ஏக்கமுண்டு கண்மணியே இமை திறந்தாய் கண்மணியே நான் கண்டேன் புது உலகை கண்மணியே நீ வாய் திறந்தால் கண்மணியே எனக்கொரு புது மொழி கேக்குதடி

சாகசம்

எனை போற்றி எனை வாழ்த்தி அனுப்பி வைத்தாள் கண்ணம்மா வழக்காடும் உரிமையெல்லாம் எனக்காக எடுத்து கொண்டாள் கண்ணம்மா பண்டிகையில் பரிமாறி பட்டினி இருந்தால் கண்ணம்மா தலை குனியாமல் எனை நிமிர வைத்தாள் கண்ணம்மா தடுமாறும் வேளையெல்லாம் என் கலக்கத்தை கண்டு கொண்டாள் கண்ணம்மா நிறை மாதம் முதல் இன்று வரை எனை சுமந்து கொண்டாள் கண்ணம்மா உனை இன்றி என் வாழ்நாளை நான் நகர்த்துவது இயல்பில்லை இது போல ஒரு சாகசத்தை நான் காண போவதுமில்லை

வாசல் திறக்கட்டுமே

எம் பெருமை எம் தேசம் வேளாண்மை விவசாயம் நீரும் வேண்டும் சோறும் வேண்டும் களிந்திருக்க சில நேரம் வேண்டும் அனைத்தறியும் சமூகமே பின் எப்படி விளைச்சலை மறந்தாய் பட்டுடுத்தி படையலிட்டு பல காலம் வாழ்ந்து வந்தாய் திடீரென்று சில நாளில் கலாச்சார அழிவென்றாய் புரிந்துகொள்ளேன் என் மனங்களே வீடு இருக்கும் தைரியத்தால் வில்லாக வளைந்து விட்டால் நாளை உன்னை காடு வரை சுமந்து செல்ல ஒரு சனமும் இருக்காதே உன் வாழ்க்கை உன் கையில்

வாசல் திறக்கட்டுமே

எம் பெருமை எம் தேசம் வேளாண்மை விவசாயம் நீரும் வேண்டும் சோறும் வேண்டும் களிந்திருக்க சில நேரம் வேண்டும் அனைத்தறியும் சமூகமே பின் எப்படி விளைச்சலை மறந்தாய் பட்டுடுத்தி படையலிட்டு பல காலம் வாழ்ந்து வந்தாய் திடீரென்று சில நாளில் கலாச்சார அழிவென்றாய் புரிந்துகொள்ளேன் என் மனங்களே வீடு இருக்கும் தைரியத்தால் வில்லாக வலைந்துவிட்டால் நாளை உன்னை காடு வரை சுமந்து செல்ல ஒரு சனமும் இருக்காதே உன் வாழ்க்கை உன் கையில்

கசப்பு மிட்டாய்

கடைத்தெருவில் கைப்பிடித்து மாலையிலே நடந்து சென்றேன் என் தந்தையுடன் ... வீட்டிலே கொதித்து விட்ட கலயத்தை அவர் பாய்ச்சலில் தெரிந்து கொண்டேன் ... கடையை வந்து சேர்ந்த உடன் கேட்டு விட்டேன் எனக்கு பிடித்த பஞ்சு மிட்டாயை ... கடைக்காரனுக்கு பல காலம் கடன் பாக்கி ... ஒருபாடு எனக்காக வாங்கி தந்தார் ... கடைசியாக கணக்கு பார்த்து காசு கேட்டார் கடைக்காரன் ... அவர் பதில் சொல்ல தயங்கி நின்று வாய் திறப்பதற்க்குள் ... பஞ்சு மிட்டாய் கசந்ததுவே

கசப்பு மிட்டாய்

கடைத்தெருவில் கைப்பிடித்து மாலையிலே நடந்து சென்றேன் என் தந்தையுடன் ... வீட்டிலே கொதித்து விட்ட கலயத்தை அவர் பாய்ச்சலில் தெரிந்து கொண்டேன் ... கடையை வந்து சேர்ந்த உடன் கேட்டு விட்டேன் எனக்கு பிடித்த பஞ்சு மிட்டாயை ... கடைக்காரனுக்கு பல காலம் கடன் பாக்கி ... ஒருபாடு எனக்காக வாங்கி தந்தார் ... கடைசியாக கணக்கு பார்த்து காசு கேட்டார் கடைக்காரன் ... அவர் பதில் சொல்ல தயங்கி நின்று வாய் திறப்பதற்க்குள் ... பஞ்சு மிட்டாய் கசந்ததுவே

நெரிசல் பூ

சிறிதே கண் இமைகளில் நீர் வரும்வரை இளவெயில் ஒன்று எனை சிறகடிக்குதே கதைக்களம் ஒன்று இடைவெளியின்றி எனை நகர்த்துதே கடும் குளிரிலும் கடல் அலையினை கடந்தொதுங்கிடும் பரவச நிலை பல தெரியுதே|

பிம்பம்

பிம்பங்களில் புன்னகைத்தேன் சில நேரம் செவி மடுத்தென் பறவைகளின் மொழியறிந்தேன் காகிதத்தில் மையிட்டேன் கடலளவு வர்ணித்தேன் கவிதைதானடி நீ எனக்கு காற்சிலம்பு நான் உனக்கு நித்திரையில் கனவு கண்டேன் கனவினிலே நிலவு கண்டேன் நெஞ்சினிலே வேள்வியொன்றை எண்ணையூற்றி வளர்த்திருந்தேன்

நெரிசல் பூ

சிறிதே கண் இமைகளில் நீர் வரும்வரை இளவெயில் ஒன்று எனை சிறகடிக்குதே கதைக்களம் ஒன்று இடைவெளியின்றி எனை நகர்த்துதே கடும் குளிரிலும் கடல் அலையினை கடந்தொதுங்கிடும் பரவச நிலை பல தெரியுதே|

மறு பிறவி

அழகாய் போனதடி இவ்வுலகம் உன்னுடனே புதிதாய் தோனுதடி என்னுணர்வும் அதிகாலை கதிரவனுக்கும் அரைச்சந்திர நிலவுக்குமுள்ள இடைவெளிகள் நீளுதடி முத்துச்சிதறும் புல்வெளியும் முளைத்தேவிடாத விதைகளும் இயற்க்கையாக விளங்குதடி சிறு குழந்தையின் சிரிப்பிலே மனநோயிலிருந்து மரணித்தேனடி சிறிதே காலம் என் கருவறையில் சிற்பமாக இருந்துவிட்டாயடி அழகாய் போனதடி இவ்வுலகம்

தேநீர் கனவு

கண்ணம்மா கால சக்கரத்தில் உன்னை கடுகளவே விரித்து வைத்தேன் கண்ணம்மா என் நாள் அத்தனையும் உன் புன்னகைதான் பூஜித்தது கண்ணம்மா மறுகணமும் மறுபொழுதும் இல்லாமல் போனதினால் கண்ணம்மா உன் மனம் விரும்பும் கள்வனாய் கூட வாய்ப்புகள் கிட்டவில்லை கண்ணம்மா கல்லறை வரை கணக்குமடி கண்ணீர் விட காரணம் இல்லையடி கண்ணம்மா எனக்கு மட்டும் அனுமதி கொடு அதை மட்டுமாவது வைத்து கொண்டு கண்ணம்மா கழிந்து விடும் என் நொடி பொழுது

எனது தேசம் எனது பிரகடனம்

முதலுதவியில் கிடைத்த மூன்று நச்சு குப்பிகள் எமக்கானது மட்டுமல்ல... எம் சமூகத்தின் சகிக்க முடியாத இன்னல்கள் ஆயுத போரை நியாயப்படுத்தின... முன்னே தெரிந்த ஒரே வழியும் என் இடம் சேராது என தெரிந்தும் பயணத்தை தொடர்ந்தோம்... சில சதிகளும் சூழ்ச்சிகளும் எமது சமூகத்திற்கு எதிராக போர் தொடுத்தன... வழியிலே விடை பெறுகிறேன் வீழ்வேனென்று நினைத்தாயோ ...