Skip to main content

Posts

Showing posts from March, 2017

தீபாவளி கசப்புகள்

உனக்கென்று பண்டிகையுண்டா எனக்காகவே எதையும் செய்ய, இன்றெனக்கு சுவைக்குதடி தீபாவளி இனிப்புகளின் கசப்புகளை மறக்காமல் காத்து வைப்பேன் அடுத்த முறை அவகாசம் கிடைக்கும் வரை சில்லறையில் சில நாட்கள் , அது என் கல்லறை வரை கணக்குமடி எப்படி செய்வேன் உனக்கு கைமாறு யென்று

குறுதிக் காடு

நெல்லுக்கும் வயலுக்கும் வாரி வாரி இறைத்த நாட்கள் போய் நிவாரணம் பெற நிற்கதியாய் திருவோடை ஏந்த வைத்தாய் நிலை மாறும் ஒரு காலம் இது என்னுடைய நிலை இல்லை வருங்காலம் பிரதிபலிக்கும் உணவின்றி நீரில்லை இப்போது,  நிலத்தையும் உரிமை கொண்டாட முடியவில்லை விளைச்சலுக்கென்று கடன் கேட்டேன் கருகிய பின் எனக்கெதற்கு ஜகம் அழியும் ஒரு காலம் பாரதியின் கூற்றுப்படி எல்லாமே சூழ்ச்சிகள் தான் , தன் மானம் என்னை கொள்ள , மூச்சிற்கு என்ன பயன் புரிந்து கொள்வாய் சமூகமே ...