நெல்லுக்கும் வயலுக்கும்
வாரி வாரி இறைத்த நாட்கள் போய்
நிவாரணம் பெற நிற்கதியாய்
திருவோடை ஏந்த வைத்தாய்
நிலை மாறும் ஒரு காலம்
இது என்னுடைய நிலை இல்லை
வருங்காலம் பிரதிபலிக்கும் உணவின்றி
நீரில்லை இப்போது, நிலத்தையும்
உரிமை கொண்டாட முடியவில்லை
விளைச்சலுக்கென்று கடன் கேட்டேன்
கருகிய பின் எனக்கெதற்கு
ஜகம் அழியும் ஒரு காலம் பாரதியின்
கூற்றுப்படி
எல்லாமே சூழ்ச்சிகள் தான் , தன் மானம்
என்னை கொள்ள , மூச்சிற்கு என்ன பயன்
புரிந்து கொள்வாய் சமூகமே ...
Comments
Post a Comment