நிழல் பிம்பங்களின் கனவுகளில் காலை வேளைகளை நிழல் கனவுகளின் பிம்பங்களில் மாலை வேளைகளை நெஞ்சோடு பிசகாமல் வைத்திருப்பேன் புகையாமல் நெருப்பாக உருகாதே பொன்மானே
உனக்கென்று பண்டிகையுண்டா
எனக்காகவே எதையும் செய்ய,
இன்றெனக்கு சுவைக்குதடி
தீபாவளி இனிப்புகளின் கசப்புகளை
மறக்காமல் காத்து வைப்பேன்
அடுத்த முறை அவகாசம் கிடைக்கும் வரை
சில்லறையில் சில நாட்கள் , அது என் கல்லறை வரை கணக்குமடி
எப்படி செய்வேன் உனக்கு கைமாறு யென்று
Comments
Post a Comment