இனியும்
இதையும்
கொஞ்சம்
களைந்தே நடந்தேன்
நிழலும் நினைவும் ஒன்றாய்
விலக
அடுத்தடுத்து ஆழம் கொள்ள
மை எல்லாம் மனம் போல
வண்ணங்களால்
கோலமிட்டேன்
புள்ளிகளுக்குள் புதைந்து
போன
வரிகளை கொஞ்சம் வாசித்து
பாரேன்
வழிகளில் முள்ளும்
வரிகளில் சொல்லும்
கொஞ்சம் ஒத்தே போகும்
நிலை கண்டேன்
உன் நிழல் கண்டேன்
கலை எல்லாம் கடன்
வாங்கி வந்திருந்தாய்
சொல் எங்கே சுகம் எங்கே
மனம் எங்கே மயக்கம் எங்கே
Comments
Post a Comment