நிலவோடு தினந்தோறும்
சில நிமிடங்கள் - மௌனமாக
அதன் தகதகப்பு போதும்
சில தேசம் ஆக்கிரமிக்க - வீரமுடன்
விடியல் வரை காத்திருப்போம்
பனி மலரே - விலகிப்போக
கோடி நாட்கள் வரம் இல்லை
சாபம் தானே - இப்படியே
வெள்ளை தாள் வைத்திருந்தேன்
ஆறு விரல் சிந்தனையில் - மை இல்லை
இல்லாவிடில் என்ன இப்போ
மௌனங்கள் மொழிகளாக
புரியும் வரை போர் இருக்கும்
Comments
Post a Comment