கொட்டி தீர்த்த மேக கூட்டங்களின் எல்லை கோடுகளை எட்டி பார்த்துக்கொண்டே சிட்டு குருவிகளும் சில கதைகள் பேசியதே வெட்டி எடுத்து கொண்டு வெள்ளென வீடு போனால் சாதம் வடிக்க கூடும் என்றே சுமையை தலைக்கு ஏற்றி கொண்டாள் வாடி நின்றதெல்லாம் வண்ணமயமாக உலவ கண்டு கண்கள் கிள்ளியதே அதை பார்த்து நகலெடுத்தேன் பாட்டொன்று மெல்லிசையாய் காற்றில் கசிந்ததுவே பல ஆண்டுகள் ஆகுமடி பல்லவி புரிவதற்கு சாகசம் செய்யாதே சில காலங்கள் பிறை நிலவே சேவல் கூவியதே பொழுது புலர்ந்ததுவே மாற்றம் தேவையில்லை மார்க்கம் உள்ளதடி