சில்லறை கல்லறை
ஊர் கூடி ஓலமிட்டு
காவேரி நதி போல கண்ணீரை கடன் வாங்கி
ஓர் நாள் முழுவதும்
உன் பெருமைகளை மட்டுமே
பாட்டுரைத்து பல்லக்கிலே
பவனி வைத்து
பிரிந்திருந்த சொந்தங்களை
சேர்த்து வைத்து
நிஜமாக சென்று விட்டாய்
ஒற்றை வழி மார்க்கத்திலே
இன்று முதல்
உன் கனவுகளை
சுமப்பதென்று கண்ணீருடன்
கையில் பந்தமிட்டேன்
கடைசி வரை
நம்பவில்லை
நீயின்றி ஒரு உலகை
நிழல் பிம்பங்களின் கனவுகளில் காலை வேளைகளை நிழல் கனவுகளின் பிம்பங்களில் மாலை வேளைகளை நெஞ்சோடு பிசகாமல் வைத்திருப்பேன் புகையாமல் நெருப்பாக உருகாதே பொன்மானே
Comments
Post a Comment