Skip to main content

Posts

Showing posts from January, 2020

உவரி மா

எந்தன் மதி அறியா உந்தன் மழலை மொழி அதில் உளரல்கள் எல்லாம் எந்தன் பழி கண்ணோடு பேசுவதெல்லாம் எனக்கு சற்றே புதியதடி விலையில்லா பொருளொன்று விடை சொல்லாமல் எனை கேள்வி கேட்க இரண்டே இடைவெளி இருப்பது எதற்க்கடி கொள்ளை போன பின் ஆணவம் கொள்ளும் அதிகாரம் ஏதடி கொஞ்சம் தனித்தே பறந்தேன் இறகை விரித்தபடி மழை மேகம் கருக்கள் கொள்ளுதடி அந்த தெருவின் வளைவு வரை கொஞ்சம் குடையை மறைத்து வையடி மழைத்துளி கொஞ்சம் உவர்க்குதடி