Skip to main content

உவரி மா

எந்தன் மதி அறியா
உந்தன் மழலை மொழி

அதில் உளரல்கள் எல்லாம்
எந்தன் பழி

கண்ணோடு பேசுவதெல்லாம்
எனக்கு சற்றே புதியதடி

விலையில்லா பொருளொன்று
விடை சொல்லாமல்
எனை கேள்வி கேட்க

இரண்டே இடைவெளி
இருப்பது எதற்க்கடி

கொள்ளை போன பின்
ஆணவம் கொள்ளும்
அதிகாரம் ஏதடி

கொஞ்சம் தனித்தே
பறந்தேன் இறகை
விரித்தபடி மழை மேகம்
கருக்கள் கொள்ளுதடி

அந்த தெருவின்
வளைவு வரை கொஞ்சம்
குடையை மறைத்து வையடி

மழைத்துளி கொஞ்சம்
உவர்க்குதடி

Comments

Popular posts from this blog

மென்பொருள்

இனியும் இதையும் கொஞ்சம் களைந்தே நடந்தேன் நிழலும் நினைவும் ஒன்றாய் விலக அடுத்தடுத்து ஆழம் கொள்ள மை எல்லாம் மனம் போல வண்ணங்களால் கோலமிட்டேன் புள்ளிகளுக்குள் புதைந்து போன வரிகளை கொஞ்சம் வாசித்து பாரேன் வழிகளில் முள்ளும் வரிகளில் சொல்லும் கொஞ்சம் ஒத்தே போகும் நிலை கண்டேன் உன் நிழல் கண்டேன் கலை எல்லாம் கடன் வாங்கி வந்திருந்தாய் சொல் எங்கே சுகம் எங்கே மனம் எங்கே மயக்கம் எங்கே

மின்மினி

நிலவோடு ஒரு நாளை கடக்காமல் விரியாது என் படுக்கை பகல்போல் வெளிச்சம் கண்டேன் பல காலம் நிறங்கள் கண்டேன் இடயிடையே இலக்கம் கண்டேன் ஒன்றுமொன்றுமாய் மயக்கம் கொண்டேன் கதவோடு மறையாதே சன்னல்கள் மறுக்காதே சேவலோடு கடைத் தெருவும் கூவி விட்டது உணர்ந்துவிட்டேன் உளரிவிட்டேன் உறவெல்லாம் ஒன்றாய் சேர்க்கும் உபாயம் கண்டு விட்டேன் கலாபம் ஏந்தி நிற்க்கும் கனாவில் விண்மீன்கள் நீந்தி போகும் மின்மினியாய் வேடிக்கை பார்த்தேன்

நீலமாய் கடலொன்றை

விலக்கினால் விலகலாம் வலியெல்லாம் தாங்குமா உன் இதயம்தான் அதன் சுவர்களே வெளிப்பூச்சம்மா கனவுகள் களையலாம் கவிதைகள் நெருடுதே உயிர்வரை குழம்பினேன் தவறென்ன தவறினேன் தலையணை வெறுமையே தலைக்கணம் ஒதுக்கினேன் நீலமாய் கடலொன்றை நெஞ்சுக்குள்ளே காண்கிறேன் உயிர்வரை உவர்க்குதே உறக்கத்தில் உளறினேன் உன் தனிமையை கேட்டுத்தான் என் இளமையும் தவிக்குதே நடப்பதை ரசிகனாய் எனக்குள்ளே நடிக்கிறேன் நடனங்கள் இடைவெளி கடக்கையில் வியக்கிறேன்