கனவு கண்டேன் தோழி
பூ வனங்கள் மனம் வீச கண்டேன்
மயிலாடும் மலைகள் கண்டேன்
மயிர் கூச்செறியும் மரங்கள் கண்டேன்
கொத்து கொத்தாய் கனிகள் கண்டேன்
மண் வாசம் வீசும் வயல் வெளிகள் கண்டேன்
வற்றாத கேணி கண்டேன்
போர் அடிக்கும் சீருடை கண்டேன்
பண்டிகையில் பாசம் கண்டேன்
கண்ணீர் வடிக்கும் மேகம் கண்டேன்
இறுதியில் விவசாயியின் சிரிப்பை கண்டேன்
விடிந்தே போனது தோழி
கண்டதெல்லாம் கனவில்லை
கடந்தே போய்விட்ட பாதையடி
நான் கலங்க கலங்குகிறாயோ தோழி
இந்த வடு இருந்திருந்தால் அவன் கலங்க
இந்த வானம் கலங்கியிருக்குமே
அதெப்படி குறை அனைத்தும் இங்கிருங்க
உனை வசைந்து என்ன பயன்
சில நாட்கள் உணர்வோடு
Comments
Post a Comment