Skip to main content

கனவு கண்டேன் தோழி

கனவு கண்டேன் தோழி

பூ வனங்கள் மனம் வீச கண்டேன்

மயிலாடும் மலைகள் கண்டேன்

மயிர் கூச்செறியும் மரங்கள் கண்டேன்

கொத்து கொத்தாய் கனிகள் கண்டேன்

மண் வாசம் வீசும் வயல் வெளிகள் கண்டேன்

வற்றாத கேணி கண்டேன்

போர் அடிக்கும் சீருடை கண்டேன்

பண்டிகையில் பாசம் கண்டேன்

கண்ணீர் வடிக்கும் மேகம் கண்டேன்

இறுதியில் விவசாயியின் சிரிப்பை கண்டேன்

விடிந்தே போனது தோழி

கண்டதெல்லாம் கனவில்லை

கடந்தே போய்விட்ட பாதையடி

நான் கலங்க கலங்குகிறாயோ தோழி

இந்த வடு இருந்திருந்தால் அவன் கலங்க

இந்த வானம் கலங்கியிருக்குமே

அதெப்படி குறை அனைத்தும் இங்கிருங்க

உனை வசைந்து என்ன பயன்

சில நாட்கள் உணர்வோடு

Comments

Popular posts from this blog

நானாகி போனேன்

நிழல் பிம்பங்களின் கனவுகளில் காலை வேளைகளை நிழல் கனவுகளின் பிம்பங்களில் மாலை வேளைகளை நெஞ்சோடு பிசகாமல் வைத்திருப்பேன் புகையாமல் நெருப்பாக உருகாதே பொன்மானே

மென்பொருள்

இனியும் இதையும் கொஞ்சம் களைந்தே நடந்தேன் நிழலும் நினைவும் ஒன்றாய் விலக அடுத்தடுத்து ஆழம் கொள்ள மை எல்லாம் மனம் போல வண்ணங்களால் கோலமிட்டேன் புள்ளிகளுக்குள் புதைந்து போன வரிகளை கொஞ்சம் வாசித்து பாரேன் வழிகளில் முள்ளும் வரிகளில் சொல்லும் கொஞ்சம் ஒத்தே போகும் நிலை கண்டேன் உன் நிழல் கண்டேன் கலை எல்லாம் கடன் வாங்கி வந்திருந்தாய் சொல் எங்கே சுகம் எங்கே மனம் எங்கே மயக்கம் எங்கே

இயல்பை தேடி

நீதியெ ன்பதையா னறியேன் என் அற்புதமே நீவீ ரறிகிலேன் கொன்று மதின்று மழித்தார் அதுகொ டிதென்று உரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ நேர்மையும் வருமையும் சேர்ந்தே வளருவதனு ரமென்னவெ ன்று உரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ சாதியின் பெயரோ மதத்தின் பெயரோ மக்கி கிடக்கு மனதை கரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ முற்பி றவியும் பின்வரு வதுமென தண்டனைகளை நியாயப் படுத்துவதும் நியமிக்க மறந்தாயோ - அஃதில்லையோ அற்புதமே அனைத் தொதுங்குமா ற்றின் கரைகளை போலே இடித்துரைத்தா லென்ன பிறப்பேனி றப்பேனி டையிலே வந்துவ ந்தேபோ குமிந்த கலக்கமே நுன்றரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ உள்ளே தேடல் தொடரும்