கண்மணியே
கதை கேளாய்
கண்மணியே
துயில் கொள்ளேன்
கண்மணியே
சிணுங்காதே
கண்மணியே
களித்து மகிழ்
கண்மணியே
என் ஆவியடி
கண்மணியே
பயக்காதே
கண்மணியே
உனக்கு சிரிப்பு வரும்
கண்மணியே
அதில்தான் என் ஏக்கமுண்டு
கண்மணியே
இமை திறந்தாய்
கண்மணியே
நான் கண்டேன் புது உலகை
கண்மணியே
நீ வாய் திறந்தால்
கண்மணியே
எனக்கொரு புது மொழி கேக்குதடி
Comments
Post a Comment