இனியும் இதையும் கொஞ்சம் களைந்தே நடந்தேன் நிழலும் நினைவும் ஒன்றாய் விலக அடுத்தடுத்து ஆழம் கொள்ள மை எல்லாம் மனம் போல வண்ணங்களால் கோலமிட்டேன் புள்ளிகளுக்குள் புதைந்து போன வரிகளை கொஞ்சம் வாசித்து பாரேன் வழிகளில் முள்ளும் வரிகளில் சொல்லும் கொஞ்சம் ஒத்தே போகும் நிலை கண்டேன் உன் நிழல் கண்டேன் கலை எல்லாம் கடன் வாங்கி வந்திருந்தாய் சொல் எங்கே சுகம் எங்கே மனம் எங்கே மயக்கம் எங்கே
கொஞ்சமாய் எடுத்து வைத்த கொப்பரை மனமும் செக்குக்கு இளைப்பாற ஒதுங்காத உன் பார்வை அதில் ஒன்றாமல் இருக்க என்னால் கலங்காத கடல் உப்பாய் உவர்த்தாலும் உள்ளங்கையால் முழுக்க கன்னம்தான் கொஞ்சம் மறைக்க சிவந்தால் என்ன நான் சிலையாக இன்னும் கொஞ்ச காலம் நிலைக்க
Comments
Post a Comment