வெள்ளை மாளிகை பச்சை காகம்
மிகையாகாது விடை பெற்று போனாய்
உன் சங்கடங்கள் யாவும் இங்கே சங்கீதங்கள்
ஆகி என் துயில் கொள்ளும் காலை வேளை
மின்னிய போதெல்லாம் பொன்னென்று
அறியேன் அதன் இன்னலும் அறியேன்
என்னை கலசத்தில் ஏற்றி வைத்தாய்
கால் நூற்றாண்டு கதையெல்லாம்
வெறும் காகிதத்தில் கண்டறிந்தேன்
வெட்கத்தை விட்டு சில மணி நேரம்
மழை சாரலில் நனைந்து விட்டேன்
தேங்கிய வெள்ளம் கண்களினூடே
வரப்பெல்லாம் நீல நாரை நடை பயில
இங்கிருந்து துவங்குகிறேன்
உன் கங்கணங்கள் யாவும் என் லட்சியங்கள்
விழுதான சகோதரனே உன்னை
மறு ஜென்மம் மகனாய் பெற
புண்ணியம் என்ன செய்ய
என் உயில் எழுதி முடிக்குமுன்னே
உன் விதை என்றும் கண்ணுக்குள்ளே
என்னை வழி நடத்து வீட்டு திண்ணை குருவே
நீ பட்ட காயம் , அவமானம் , துயரம்
யாவும் நான் மறக்காமல் என்னை
நினைவுறுத்து என் சகோதரா
விட்டில் பூச்சி போல இருந்த என்னை
தழல் கொள்ள செய்தாய் உன் எழுத்து
பிழைகளால் என் வாழ்க்கை பிழைகளை
உணர்த்திவிட்டாய் எட்டாம் வகுப்பு எனக்கு
எட்டவில்லை
விழிக்கும் வரை அல்ல நான் கேட்பது
விண்ணை பிளக்கும் வரை
நிதர்ஷணம் நிலை பெரும்
ஒரு உன்னதமான உள் கட்டமைப்பு
விலை போகாதே
Comments
Post a Comment