Skip to main content

உயிர்(ல்)

வெள்ளை மாளிகை பச்சை காகம்
மிகையாகாது விடை பெற்று போனாய்
உன் சங்கடங்கள் யாவும் இங்கே சங்கீதங்கள்
ஆகி என் துயில் கொள்ளும் காலை வேளை

மின்னிய போதெல்லாம் பொன்னென்று
அறியேன் அதன் இன்னலும் அறியேன்
என்னை கலசத்தில் ஏற்றி வைத்தாய்
கால் நூற்றாண்டு கதையெல்லாம்
வெறும் காகிதத்தில் கண்டறிந்தேன்

வெட்கத்தை விட்டு சில மணி நேரம்
மழை சாரலில் நனைந்து விட்டேன்
தேங்கிய வெள்ளம் கண்களினூடே
வரப்பெல்லாம் நீல நாரை நடை பயில

இங்கிருந்து துவங்குகிறேன்
உன் கங்கணங்கள் யாவும் என் லட்சியங்கள்
விழுதான சகோதரனே உன்னை
மறு ஜென்மம் மகனாய் பெற
புண்ணியம் என்ன செய்ய

என் உயில் எழுதி முடிக்குமுன்னே
உன் விதை என்றும் கண்ணுக்குள்ளே
என்னை வழி நடத்து வீட்டு திண்ணை குருவே

நீ பட்ட காயம் , அவமானம் , துயரம்
யாவும் நான் மறக்காமல் என்னை
நினைவுறுத்து என் சகோதரா

விட்டில் பூச்சி போல இருந்த என்னை
தழல் கொள்ள செய்தாய் உன் எழுத்து
பிழைகளால் என் வாழ்க்கை பிழைகளை
உணர்த்திவிட்டாய் எட்டாம் வகுப்பு எனக்கு
எட்டவில்லை

விழிக்கும் வரை அல்ல நான் கேட்பது
விண்ணை பிளக்கும் வரை
நிதர்ஷணம் நிலை பெரும்

ஒரு உன்னதமான உள் கட்டமைப்பு
விலை போகாதே

Comments

Popular posts from this blog

நானாகி போனேன்

நிழல் பிம்பங்களின் கனவுகளில் காலை வேளைகளை நிழல் கனவுகளின் பிம்பங்களில் மாலை வேளைகளை நெஞ்சோடு பிசகாமல் வைத்திருப்பேன் புகையாமல் நெருப்பாக உருகாதே பொன்மானே

மென்பொருள்

இனியும் இதையும் கொஞ்சம் களைந்தே நடந்தேன் நிழலும் நினைவும் ஒன்றாய் விலக அடுத்தடுத்து ஆழம் கொள்ள மை எல்லாம் மனம் போல வண்ணங்களால் கோலமிட்டேன் புள்ளிகளுக்குள் புதைந்து போன வரிகளை கொஞ்சம் வாசித்து பாரேன் வழிகளில் முள்ளும் வரிகளில் சொல்லும் கொஞ்சம் ஒத்தே போகும் நிலை கண்டேன் உன் நிழல் கண்டேன் கலை எல்லாம் கடன் வாங்கி வந்திருந்தாய் சொல் எங்கே சுகம் எங்கே மனம் எங்கே மயக்கம் எங்கே

இயல்பை தேடி

நீதியெ ன்பதையா னறியேன் என் அற்புதமே நீவீ ரறிகிலேன் கொன்று மதின்று மழித்தார் அதுகொ டிதென்று உரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ நேர்மையும் வருமையும் சேர்ந்தே வளருவதனு ரமென்னவெ ன்று உரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ சாதியின் பெயரோ மதத்தின் பெயரோ மக்கி கிடக்கு மனதை கரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ முற்பி றவியும் பின்வரு வதுமென தண்டனைகளை நியாயப் படுத்துவதும் நியமிக்க மறந்தாயோ - அஃதில்லையோ அற்புதமே அனைத் தொதுங்குமா ற்றின் கரைகளை போலே இடித்துரைத்தா லென்ன பிறப்பேனி றப்பேனி டையிலே வந்துவ ந்தேபோ குமிந்த கலக்கமே நுன்றரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ உள்ளே தேடல் தொடரும்