சாலையின் ஓரமெல்லாம்
சில தூரல்கள் ஒன்று கூடி
ஓடங்கள் உருவாக்கி
கலையாத குப்பையெல்லாம்
கப்பலாக மிதக்க விட்டு
கடலில் சேர்க்க முனைந்ததுவே
காரிருள் மேகமொன்று
இதைக்கான தனக்கான
நிறத்தையும் இழந்ததுவே
வனத்துக்குள்ளே வந்ததுபோல்
மரமெல்லாம் மகிழ்ந்தனவே
துப்பரவுக்கு வேலை மிச்சம்
ஒரு அதிகாலை சாட்சியாக
குடையோடு கை குலுக்கி சென்றேன்
Comments
Post a Comment