நந்தவனம்
கடந்துவிட்டேன்
கொள்ளிடை காட்டுக்குள்ளே
பந்தமிட்டு
நடு இரவில்
ஓராயிரம் ஓலங்களில்
சப்தமில்லா நடுக்கத்தில்
நித்திரையை தொலைத்துவிட்டேன்
ஒத்தையடி பாதையடி
ஒய்யாரம் இல்லையடி
நடு நடுவே திக்குற்றேன்
கூட வருவது யாரென்று கேட்டுக்கொண்டே
அழகான திருப்புமுனை
அதன் நடு வாயில் பச்சை பட்டாடை
அதன் வனப்பினிலே
விழி இரண்டை விதைத்து வைத்தேன்
காய் மட்டும் புளிக்குமடி
இங்கு கனிகூட விலக்கில்லை
பசியாற உண்டபின்பு
தீ மூட்டி நித்திரையில்
மையலுற்றேன்
விடிந்த போது வீட்டின்
படுக்கையறை கண்ணாடியில்
பூதம் கண்டேன்
கனவெல்லாம் கருப்பு வெள்ளை
நிறம் தெரிந்தால் என்ன செய்ய
Comments
Post a Comment