காலியான சட்டைப்பையின்
சுவடு முகத்தின் ஓரத்தில்
ஒளிந்திருக்க நடையை வேகம்
கூட்டினார் , பாலு .
இந்த சாலையின் வேகத்தில்
சில நேரங்களில் தடுமாறிப்போயிருக்கிறார்.
விர்ரென்று ஒரு மகிழுந்து அதன் திரையை
விலக்கி உரிமையாளரை காட்டியது
தயக்கமான உரையில் வழி கேக்க,
பெரும்பாலும் வாகனங்கள் வழி
கேட்பது காலாற நடப்பவனிடம்தான்
ஒரே சைகையில் வழி காட்டி விட்டு
நகர்ந்தார் பாலு .
வந்தவர் வழி கேட்டதும் , இப்போது
பாலு பயணப்பட்டிருப்பதும்
ஒரே இடம் தான் ...
Comments
Post a Comment