பால் மணமி ல்லா
பாலைவன பொம்மை
புன் சிரிப்பில் பரிகசிக்க
பசியோடு தாகம்
கண்ணில் சொருகுதடி
மனதில் கணம் கூடுதடி
கண்ண குழிகளிலே
நீரோடை இருந்ததற்கு
உப்பு நீர் சுவடுகள் உள்ளதடி
கண்ணீர் கூட கடனானதடி
மெய்யான தீபாவளி
ஆடைகளை பொத்தலோடு
போர்த்தியிருந்த காட்சியடி
நிர்வாணம் நானானேன்
பாழ்பட்ட காலணிகள்
சேராத சோடியிலே
பாதங்களாய் எண்ணி பார்த்தேன்
நெருடல்கள் நெஞ்சுக்குள்ளே
நீங்காமல் நிறைகிறதே
கரை புரண்ட கங்கை
நதி கண்ணில் மட்டும் போதாது ஆண்டவரே
ஏன் இப்படி என்றெல்லாம்
எண்ணுவதும் , சாபமென்று
கூறுவதும் கடவுள்கள் வேலை
சிறிதேனும் மனிதம் செய்வோம்
Comments
Post a Comment