கொள்ளிடக் கரை ஓரத்திலே
குமரிகள் கண்டம்
ஓடிக் கொண்டே உறங்கி கொள்ளும்
ஆற்று வெள்ளம்
அதன் ஆடை வீழ்ச்சிகளில்
வானம் கூட ஏழு வண்ணம்
பெருக்கெடுத்து சில தூரம்
கோபம் கொள்ளும்
பெரும்பாலும் வழி நெடுக
பச்சை வாசம் கொள்ளும்
தொழிற்சாலை கோரை பற்கள்
தொடும் போது துரதிர்ஷ்டம்
பின்னது பாயும் நிலமெங்கே
காய்த்து தொங்கும்
அது ஒரு நீர்க்கோலம்
Comments
Post a Comment