நடை பாதை
கூட
கொஞ்சம் நகர்ந்து விட்டது
சந்திரனும்
கூட
கோபம் கொண்டது
மேகம்
கூட
கலங்கிவிட்டது
காபி
கூட
கசந்து விட்டது
விண்மீன்கள்
கூட
விரைந்து விட்டது
ஒன்றே தான்
உள்ளம் அறியேன்
காவல் கொள்ளை
காலம் கூட அறியேன்
மின்னல் தானே முன்னாடி
இடி எப்போதும் பின்னாடி
பார்வை ஒன்றே போதுமடி
பார்ப்போம் இடிக்குமா யென்று
Comments
Post a Comment