அமைதியாய் என்றே - பேசாதே
என்றில்லை
அன்பாய் என்றே - கோபிக்காதே
என்றில்லை
ஆசைப்படாதே என்றே - வெறுப்பாய்
என்றில்லை
சிரிக்காதே என்றே - முறைப்பாய்
என்றில்லை
கனவு என்றே - உறங்கேன்
என்றில்லை
விழிப்பாய் என்றே - உணர்வாய்
என்றில்லை
கடப்பாய் என்றே - மறவேன்
என்றில்லை
மனதால் என்றே - காமமில்லை
என்றில்லை
ஒளிதான் என்றே - ஒளித்து வை
என்றில்லை
கவிதை என்றே - காவியத் தலைவி
என்றில்லை
நிழல் பிம்பங்களின் கனவுகளில் காலை வேளைகளை நிழல் கனவுகளின் பிம்பங்களில் மாலை வேளைகளை நெஞ்சோடு பிசகாமல் வைத்திருப்பேன் புகையாமல் நெருப்பாக உருகாதே பொன்மானே
Comments
Post a Comment