Skip to main content

வலது கண்ணாடி பிம்பம்

நானாக சிரித்தாலும்
நயமாக நடந்தாலும்
நிலவோடு நிற்கின்றேன்
நில்லாமல் அலைகின்றேன்

புது முல்லை வெள்ளை
வயலோரம் பல தென்னை
வழி நெடுக ஓடும் வாத்து

வலது கண்ணாடி பிம்பம்
வண்ணம் காட்டும் சாரல்

சொல்லாமல் போனதெல்லாம்
உன்னோடு மட்டுமில்லை
என்னோடும் இடி மழையே

அதை அவளோடு விட்டு
வைத்தேன் கனவோடு
காத்திருப்பேன் 

Comments

Popular posts from this blog

நானாகி போனேன்

நிழல் பிம்பங்களின் கனவுகளில் காலை வேளைகளை நிழல் கனவுகளின் பிம்பங்களில் மாலை வேளைகளை நெஞ்சோடு பிசகாமல் வைத்திருப்பேன் புகையாமல் நெருப்பாக உருகாதே பொன்மானே

மென்பொருள்

இனியும் இதையும் கொஞ்சம் களைந்தே நடந்தேன் நிழலும் நினைவும் ஒன்றாய் விலக அடுத்தடுத்து ஆழம் கொள்ள மை எல்லாம் மனம் போல வண்ணங்களால் கோலமிட்டேன் புள்ளிகளுக்குள் புதைந்து போன வரிகளை கொஞ்சம் வாசித்து பாரேன் வழிகளில் முள்ளும் வரிகளில் சொல்லும் கொஞ்சம் ஒத்தே போகும் நிலை கண்டேன் உன் நிழல் கண்டேன் கலை எல்லாம் கடன் வாங்கி வந்திருந்தாய் சொல் எங்கே சுகம் எங்கே மனம் எங்கே மயக்கம் எங்கே

சில நேரங்களில் பெரும்பாலும்

மழையும் இசையும் மனதை நனைத்து விட்டு செல்லும் வெள்ளபெருக்கு சில நேரங்களில் வெளியில் தெரிந்து விடும் வடிந்த நீர் சில நேரங்களில் வயல்களில் பாயும் கன்னத்தில் விளைச்சல் சில நேரங்களில் அதிகமாக இருக்கும் அறுவடை காலம் பெரும்பாலும் காலனுடைய சாட்சியம் இல்லாமல் இருக்கும்