நிழல் பிம்பங்களின் கனவுகளில் காலை வேளைகளை நிழல் கனவுகளின் பிம்பங்களில் மாலை வேளைகளை நெஞ்சோடு பிசகாமல் வைத்திருப்பேன் புகையாமல் நெருப்பாக உருகாதே பொன்மானே
இனியும் இதையும் கொஞ்சம் களைந்தே நடந்தேன் நிழலும் நினைவும் ஒன்றாய் விலக அடுத்தடுத்து ஆழம் கொள்ள மை எல்லாம் மனம் போல வண்ணங்களால் கோலமிட்டேன் புள்ளிகளுக்குள் புதைந்து போன வரிகளை கொஞ்சம் வாசித்து பாரேன் வழிகளில் முள்ளும் வரிகளில் சொல்லும் கொஞ்சம் ஒத்தே போகும் நிலை கண்டேன் உன் நிழல் கண்டேன் கலை எல்லாம் கடன் வாங்கி வந்திருந்தாய் சொல் எங்கே சுகம் எங்கே மனம் எங்கே மயக்கம் எங்கே
மழையும் இசையும் மனதை நனைத்து விட்டு செல்லும் வெள்ளபெருக்கு சில நேரங்களில் வெளியில் தெரிந்து விடும் வடிந்த நீர் சில நேரங்களில் வயல்களில் பாயும் கன்னத்தில் விளைச்சல் சில நேரங்களில் அதிகமாக இருக்கும் அறுவடை காலம் பெரும்பாலும் காலனுடைய சாட்சியம் இல்லாமல் இருக்கும்
Comments
Post a Comment