பச்சை தாமரையே
பார்வை மாறவில்லை
என்ன வேடிக்கை அது
அர்த்தம் விளங்கவில்லை
காட்டி கொடுப்பதெல்லாம்
என் சின்ன புன்னகையே
கண்கள் ஆயுதமாய் உனக்கு
அமைந்ததென்ன அதன்
கூர்மை என்னை கொஞ்சம்
வதைத்து ஒதுங்கியதே
காலை வேளையது
காயம் ஆறவில்லை
அடுத்த மாலை வேளையிலும்
வேட்டை துவங்கியதே
வெள்ளம் ஆற்றினிலே
உள்ளமெல்லாம் கரை தனிலே
காற்றுக்கென ஒரு வேலி
கண்டேன் சில வேளை
கதவு கண்டேன்
உள்ளே வர அனுமதிக்கும்
ஒப்பனையை காணவில்லை
ஒப்புக்கு ஒரு மாலை
தினம் தினமும் நகர்ந்ததுவே
நாட்காட்டி யை கிழிக்க
மறந்துவிட்டேன்
Comments
Post a Comment